லைஃப்ஸ்டைல்

உடலுக்கு வலுசேர்க்கும் ஓட்ஸ் காய்கறி சூப்

Published On 2017-12-23 03:01 GMT   |   Update On 2017-12-23 03:01 GMT
வயதானவர்கள், டயட்டில் இருப்பவர்களுக்கு வலுசேர்க்கும் இந்த ஓட்ஸ் காய்கறி சூப். இன்று இந்த சூப்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

ஓட்ஸ் - ஒரு ௧ப்
பச்சைப்பட்டாணி - 5 டீஸ்பூன்
மக்காச்சோளம் - 3 டீஸ்பூன்
கேரட் - 1
பச்சை மிளகாய் - 1
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 2
[பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - அரைத் டீஸ்பூன்
[பாட்டி மசாலா] மிளகுத்தூள் - அரைத் டீஸ்பூன்
[பாட்டி மசாலா] சீரகத் தூள் - அரைத் டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்
உப்புத்தூள் - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - மூன்று கொத்து
கொத்தமல்லி இலை - சிறிதளவு
தண்ணீர் - 2 ௧ப்.



செய்முறை :

சின்ன வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, கேரட்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

குக்கரில் நறுக்கிய காய்கறிகள், ஓட்ஸ், பச்சைப்பட்டாணி, மக்காச்சோளம், ப.மிளகாய், [பாட்டி மசாலா] மஞ்சள் தூள் அனைத்தையும் போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி மூடிவைத்து 2 விசில் வரும் வரை வேகவிடவும். 

குக்கர் விசில் போனவுடன் மூடியை திறந்து [பாட்டி மசாலா] சீரகத்தூள், [பாட்டி மசாலா] மிளகுத்தூள், உப்பு, கொத்தமல்லி இலை சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்கவிடவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, சிறிது நறுக்கிய வெங்காயம் போட்டு தாளித்து கொதிக்கும் சூப்பில் கொட்டவும். 

இறக்கும்போது எலுமிச்சை சாறு, ஊற்றிப் பரிமாறவும். 

இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News