லைஃப்ஸ்டைல்

சத்தான டிபன் சாமை அரிசி உப்புமா

Published On 2017-07-14 03:32 GMT   |   Update On 2017-07-14 03:32 GMT
காலை, மாலை, இரவு நேரங்களில் சத்தான டிபன் சாப்பிட விரும்பினால் சாமை அரிசியில் உப்புமா செய்து சாப்பிடலாம். இன்று இதன் செய்முறை விளக்கத்தை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

சாமை அரிசி - ஒரு கப்
எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
கேரட் - 1
கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
உப்பு - தேவைகேற்ப
கறிவேப்பில்லை - சிறிதளவு.



செய்முறை :

* கேரட், வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு கப் சாமை அரிசி, மூன்று கப் தண்ணீர் ஊற்றி நான்கு விசில் வந்தவுடன் இறக்கி ஆறவிடவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், கேரட், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை ஒவொன்றாக சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம், கேரட் நன்றாக வதங்கியதும் வேகவைத்த சாமை அரிசி, கறிவேப்பில்லை சேர்த்து கலந்து பரிமாறவும்.

* சத்தான சாமை அரிசி உப்புமா ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News