லைஃப்ஸ்டைல்

சத்தான டிபன் தினையரிசி முருங்கைக்கீரை அடை

Published On 2017-06-07 03:34 GMT   |   Update On 2017-06-07 03:34 GMT
சிறுதானியங்கள், கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இன்று தினையரிசி, முருங்கைக்கீரை வைத்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

தினையரிசி - 250 கிராம்.
துவரம் பருப்பு - 200 கிராம்.
மிளகாய் - 10.
உப்பு - தேவையான அளவு.
நறுக்கிய வெங்காயம் - 1 கப்.
தேங்காய் துருவல் - அரை கப்.
முருங்கைக்கீரை - 1 கப்.
நல்லெண்ணெய், பெருங்காயம் - தேவையான அளவு.



செய்முறை :

* முருங்ககைக்கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.

* தினையரிசி, துவரம் பருப்பு ஆகியவற்றை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்த பின்னர் மிளகாய் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.

* அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் வெங்காயம், தேங்காய் துருவல், முருங்கைக்கீரை, உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

* சத்தான சுவையான தினையரிசி முருங்கைக்கீரை அடை ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News