லைஃப்ஸ்டைல்

சத்து நிறைந்த சிறுதானிய முருங்கை கீரை அடை

Published On 2017-05-12 05:22 GMT   |   Update On 2017-05-12 05:22 GMT
சிறுதானியத்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சிறுதானியங்கள், முருங்கை கீரை வைத்து சத்தான அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசி பயறு சேர்த்து - கால் கிலோ,
குதிரைவாலி அரிசி, சாமை அரிசி, வரகு அரிசி சேர்த்து - கால் கிலோ,
முழு கருப்பு, உளுந்தம் பருப்பு, கொண்டைக்கடலை - தலா 4 டீஸ்பூன்,
வெங்காயம் - 2
இஞ்சி - சிறிய துண்டு,
பூண்டு - 10 பல்,
முருங்கை கீரை - 2 கைப்பிடி,
உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.



செய்முறை :

* கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசி பயறு, உளுந்தம் பருப்பு, கொண்டைக்கடலை, குதிரை வாலி அரிசி, சாமை அரிசி, வரகரிசி இவை அனைத்தையும் காலையில் முதல் மாலை வரை தண்ணீரில் ஊறவைக்கவும்.

* நன்றாக ஊறியதும், இரவு ஒரு வெள்ளைத் துணியில் கட்டிவைக்கவும். காலையில் முளை கட்டி இருக்கும் கலவையை இஞ்சி, பூண்டு, உப்பு, வெங்காயத்துடன் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.  

* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்ற எண்ணெய் விட்டு அதன் மேல் முருங்கைக் கீரையைத் தூவி இருபுறம் வேக விட்டு சுட்டு எடுக்கவும்.  

* சத்தான சிறுதானிய முருங்கை கீரை அடை ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News