லைஃப்ஸ்டைல்

செரிமான பிரச்சனையை தீர்க்கும் தனியா துவையல்

Published On 2017-04-24 03:40 GMT   |   Update On 2017-04-24 03:40 GMT
அஜீண பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த தனியா துவையலை செய்து சாப்பிடால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். இந்த துவையலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

தனியா - கால் கப்,
காய்ந்த மிளகாய் - 8,
பூண்டு - 5 பல்,
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு,
கடுகு, உளுந்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.



செய்முறை :

* வாணலியை சூடாக்கி தனியாவை போட்டு வாசனை வரும் வரை வறுத்து எடுத்து ஆற வைக்கவும்.

* அடுத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், பூண்டு, புளி, கறிவேப்பிலை, தேங்காய் துருவலை தனித்தனியாக போட்டு வறுத்து ஆறவைக்கவும்.

* ஆறியபின் எல்லாப் பொருட்களையும் ஒன்றாக்கி, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்சியில் அரைக்கவும்.

* மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுந்தம்பருப்பு தாளித்து, அரைத்த துவையலில் சேர்க்கவும்.

* சூப்பரான சத்தான தனியா துவையல் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News