லைஃப்ஸ்டைல்

புத்துணர்வு தரும் கேரட் தக்காளி ஜூஸ்

Published On 2017-04-15 07:27 GMT   |   Update On 2017-04-15 07:27 GMT
பழங்களுடன் காய்கறிகளை குளிர்பானங்களாக தயாரித்து அருந்தும்போது உடல் புத்துணர்வுடன், கோடைகால நோய் ஏதும் தாக்காமல், சரும வறட்சி, நாவறட்சி ஏற்படாமல் பாதுகாக்க முடிகிறது.
தேவையான பொருட்கள் :

கேரட் - 2
தக்காளி 2,
கருப்பு உப்பு - கொஞ்சம்,
சீரகத்தூள் - அரை ஸ்பூன்
புதினா இலைகள் - 10.



செய்முறை :

* கேரட், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கேரட், தக்காளி இரண்டையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும். நன்கு கூழாக அரைத்த பிறகு வேறு பவுலில் ஊற்றி கொள்ளவும்.

* அரைத்த ஜூஸில் கருப்பு உப்பு, சீரகத்தூள், புதினா இலைகளை கலக்கி பிரிட்ஜில் வைத்து குளிர்ச்சியான பிறகு எடுத்து அருந்தவும்.

* உடல் குளிர்ச்சியும், புத்துணர்வும் கோடைகாலத்தில் பெற இந்த ஜூஸ் உதவுகிறது.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News