லைஃப்ஸ்டைல்

சூப்பரான சத்து நிறைந்த குதிரைவாலி தயிர் சாதம்

Published On 2017-04-01 07:39 GMT   |   Update On 2017-04-01 07:39 GMT
தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இன்று குதிரைவாலி அரிசியில் தயிர் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

குதிரைவாலி - 1 கப்
நீர் - 3 கப்
தயிர் - 1/2 கப்
பால் - 2 கப்
உப்பு - சிறிதளவு
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது



செய்முறை :

* கொத்தமல்லி, ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* குதிரைவாலி அரிசியை நன்றாக கழுவி குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

* வேக வைத்த சாதத்தில் தயிர், பால், உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

* ஒரு கடாயில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு சேர்த்து பின் பெருங்காயம், இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து, கிளறி வைத்த சதத்துடன் சேர்த்து பரிமாறவும்.

* சூப்பரான சத்து நிறைந்த குதிரைவாலி தயிர் சாதம் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News