லைஃப்ஸ்டைல்

தினை எள் சாதம் செய்வது எப்படி

Published On 2017-03-06 03:45 GMT   |   Update On 2017-03-06 03:45 GMT
அதிகளவு சத்துக்கள் நிறைந்த சிறுதானியங்களை தினமும் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. அந்தவகையில் இன்று தினை எள் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

எள் - 150 கிராம்,
தினை - ஒன்றரை கப்,
உளுந்தம் பருப்பு - 50 கிராம்,
காய்ந்த மிளகாய் - 6,
வேர்க்கடலை - 50 கிராம்,
உப்பு - சுவைக்கேற்ப,
நல்லெண்ணெய் - தேவையான அளவு.

தாளிக்க :

கடுகு - அரை டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,
கடலைப் பருப்பு - ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் - அரை டீஸ்பூன்.



செய்முறை :

* தினையை, ஒரு கப்புக்கு இரண்டரைப் பங்கு என்ற விகிதத்தில் தண்ணீர் விட்டு வேகவைத்து கொள்ளவும். வெந்த தினை சாதத்தை, ஒரு தட்டில் பரப்பி ஆறவிடவும்.

* கடாயை அடுப்பில் வைத்து சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் எள், காய்ந்த மிளகாய், உளுந்தம் பருப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

* மற்றொரு கடாயில், நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, வேர்க்கடலையைப் போட்டுத் தாளித்த பின் அதில், தினை சாதத்தைப் போட்டு, எள்ளுப் பொடியைத் தூவி, நன்றாக கிளறி அடுப்பை மிதமான தீயில் 5 நிமிடம் வைத்து கிளறி இறக்கவும்.

* சத்து நிறைந்த தினை எள் சாதம் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News