லைஃப்ஸ்டைல்

சர்க்கரை நோயாளிகளுக்கான கோவைக்காய் சட்னி

Published On 2017-03-02 03:35 GMT   |   Update On 2017-03-02 03:35 GMT
சர்க்கரை நோயாளிகளுக்கு கோவைக்காய் மிகவும் நல்லது. இன்று கோவைக்காயை வைத்து சத்து நிறைந்த சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கோவைக்காய் - கால் கப்
உளுந்தம் பருப்பு - ஐந்து டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - இரண்டு
தேங்காய் துருவல் - இரண்டு டீஸ்பூன்
பெருங்காயம் - இரண்டு சிட்டிகை
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 2 ஸ்பூன்

தாளிக்க

கடுகு, உளுந்தம் பருப்பு -  அரை ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது



செய்முறை :

* கோவைக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்த நன்றாக வதக்கவும்.

* அடுத்து அதில் கோவைக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

* கடைசியாக உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி ஆற வைக்கவும்.

* நன்றாக ஆறியதும், மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, உளுந்தம் பருப்பு போட்டுதாளித்து சட்னியில் சேர்க்கவும்.

* சூப்பரான கோவைக்காய் சட்னி ரெடி.

* இந்த சட்னி சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த சட்னி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News