லைஃப்ஸ்டைல்

சுவையான ஆனியன் வரகரிசி அடை

Published On 2017-02-24 05:44 GMT   |   Update On 2017-02-24 05:44 GMT
உடல் ஆரோக்கியத்திற்கு சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று ஆனியன் வரகரிசி அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

வரகு அரிசி - 1 கப்
புழுங்கல் அரிசி - 1 கப்
பாசிபருப்பு - முக்கால் கப்
துவரம் பருப்பு - கால் கப்
உளுத்தம் பருப்பு -அரை கப்
மிளகாய் வற்றல் - 5
கறிவேப்பிலை - 1 பிடி
கல் உப்பு - தேவைக்கேற்ப
பெருங்காயம் - சிறிது

அடை வார்க்க :

எண்ணெய் அல்லது நெய் - தேவைக்கேற்ப
வெங்காயம் - 2
கொத்துமல்லி - தழை



செய்முறை :
 
* வரகு அரிசி, புழுங்கல் அரிசி மற்றும் பருப்பு வகைகளை சுத்தம் செய்து தண்ணீரில் நான்கு மணி நேரம் ஊறவிடவும்.

* வெங்காயம் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

* அரிசி, பருப்பு வகையறாக்கள் நன்கு ஊறிய பின்பு அத்துடன் கறிவேப்பிலை, மிளகாய் வற்றல், பெருங்காயம், உப்பு சேர்த்து கிரைண்டரில் கொரகொரப்பாகவும், கெட்டியாகவும் அரைத்துக் கொள்ளவும்.

* அடுப்பில் தோசைக் கல் சூடேறியதும் ஒரு கரண்டியாக மாவை எடுத்து ஊற்றி, சிறிது எண்ணெயை சுற்றி ஊற்றி, அதன் மீது பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்துமல்லியையும் தூவி சுட்டெடுக்கவும்.

* சூடான சுவையான ஆனியன் வரகரிசி அடை தயார்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News