லைஃப்ஸ்டைல்

செரிமான கோளாறுகளை போக்கும் கொத்தமல்லி விதை டீ

Published On 2017-02-13 05:16 GMT   |   Update On 2017-02-13 05:16 GMT
இந்த டீயை தினமும் பருகி வந்தால் செரிமான கோளாறுகள் சீராகும். வயிற்றுப்புண்ணைப் போக்கும். இப்போது இந்த டீயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கொத்தமல்லி விதை - 100 கிராம்,
ஏலக்காய் - 2,
பனஞ்சர்க்கரை அல்லது கருப்பட்டி - 2 டீஸ்பூன்,
பால் - அரை டம்ளர்.

செய்முறை :

* தனியாவை வெறும் வாணலியில் வறுத்து, ஆறிய பின் பொடித்து கொள்ளவும்.

* பாலை கொதிக்க வைத்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும் ஒரு டீஸ்பூன் தனியா பொடியைச் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

* நன்றாக கொதித்து வரும் போது ஏலக்காய் தட்டிச் சேர்த்து, நன்கு கொதித்ததும் இறக்கி பால், பனஞ்சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்துப் பருகவும்.

* இந்த டீயை பால் ஊற்றாமல் குடித்தால் மிகவும் நல்லது.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News