லைஃப்ஸ்டைல்

பசியை தூண்டும் சீரகம் - தனியா சூப்

Published On 2017-02-11 07:40 GMT   |   Update On 2017-02-11 07:40 GMT
வயிற்று கோளாளு, அஜீரணம் பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த சீரகம் - தனியா சூப் மிகவும் நல்லது. இந்த சூப்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

சீரகம் - கால் கப்
தனியா (மல்லி) - கால் கப்
இஞ்சி - சிறிய துண்டு
மிளகு - 2 ஸ்பூன்
எலுமிச்சைப்பழம் - 2
கறிவேப்பிலை - 2 ஆர்க்கு
உப்பு - தேவைக்கு

செய்முறை :

* இஞ்சியை தோல் சீவி வைக்கவும்.

* எலுமிச்சை பழத்திலிருந்து சாறு பிழிந்து வைக்கவும்.

* தனியா (மல்லி), சீரகம், மிளகை சிறிது தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.

* ஊறவைத்த பொருட்களுடன் கறிவேப்பிலை, இஞ்சி, சேர்த்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

* அரைத்த இந்த விழுதுடன் 2 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்த பின் வடிகட்டி சக்கையை எடுத்து விடவும்.

* வடிகட்டிய கரைசலை அடுப்பில் வைத்து நன்கு கொதித்ததும் இறக்கவும்.

* கடைசியாக எலுமிச்சை சாறு பிழிந்து சூடாக பரிமாறவும்.

* இந்த சூப் பசியை தூண்டும். உணவு நன்று செரிமானம் ஆகும். இந்த சூப் கெட்டியாக இருக்காது. கெட்டியாக வேண்டுமானால் சோளமாவு சேர்த்து கொள்ளலாம்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News