லைஃப்ஸ்டைல்

சத்து நிறைந்த கேழ்வரகு ஆப்பிள் ஸ்மூத்தி

Published On 2017-02-02 03:26 GMT   |   Update On 2017-02-02 03:26 GMT
கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்ததுள்ளது. இன்று சத்து நிறைந்த கேழ்வரகை வைத்து எப்படி எளிய முறையில் ஸ்மூத்தி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

ராகி மாவு - அரை கப்,
ஆப்பிள் - ஒன்று,
பால் - அரை கப்,
தயிர் - 3 ஸ்பூன்
தேன் - 2 மேஜைக்கரண்டி.

செய்முறை :

* ஆப்பிள் விதைகளை எடுத்து விட்டு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

* பாலை கொதிக்க வைத்து ஆற வைத்து கொள்ளவும்.

* ராகி மாவை 2 கப் நீரில் கரைத்து கொள்ளவும்.

* அடிகனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து கரைத்த ராகி கரைசலை அடுப்பில் வைத்து கைவிடாமல் கெட்டியாகும் வரை கிளற வேண்டும்.

* கெட்டியானதும் இறக்கி ஆற விடவும்.

* மிக்சியில் பால், தயிர், ராகி கூழ், ஆப்பிள், தேன் சேர்த்து நன்றாக அடித்து கலக்கவும்.

* அரைத்த ஸ்மூத்தியை கண்ணாடி கப்பில் ஊற்றி பரிமாறவும்.

* சத்து நிறைந்த கேழ்வரகு ஆப்பிள் ஸ்மூத்தி ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News