லைஃப்ஸ்டைல்

சத்தான பார்லி வெண் பொங்கல்

Published On 2017-01-07 07:39 GMT   |   Update On 2017-01-07 07:39 GMT
டயட்டில் இருப்பவர்கள், வயதானவர்கள் அடிக்கடி உணவில் பார்லியை சேர்த்து கொள்வது நல்லது. பார்லியை வைத்து பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

உடைத்த பார்லி - 1 கப்,
பாசிப் பருப்பு - கால் கப்,
ஒன்றிரண்டாகப் பொடித்த மிளகு, சீரகம் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை - சிறிது,
நெய் - 1 டீஸ்பூன்,
பெருங்காயம் - 1 சிட்டிகை.

செய்முறை :

* இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பார்லியையும், பாசிப்பருப்பையும் வெறும் கடாயில் லேசாக தனித்தனியே வறுத்து, சிறிது நேரம் ஊற வைக்கவும்.

* குக்கரை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்த பின் பார்லி, பாசிப்பருப்புக் கலவையும் சேர்த்து ஒன்றுக்கு 3 அளவு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து குக்கரில் 3 விசில் போட்டு வேக வைக்கவும்.

* வெந்ததும் சூடாகப் பரிமாறவும்.

* சுவையான சத்தான பார்லி வெண் பொங்கல் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News