லைஃப்ஸ்டைல்

சுவையான சத்தான சிறுதானிய தோசை

Published On 2016-11-02 02:51 GMT   |   Update On 2016-11-02 02:51 GMT
தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று சிறுதானிய தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

வரகு, கம்பு, சோளம் - தலா அரை கப்,
உளுந்து - கால் கப்புக்கும் சிறிது அதிகமாக,
துவரம்பருப்பு - ஒரு கைப்பிடி,
வெந்தயம் - அரை டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

* அனைத்து தானியங்களையும், பருப்பு வகைகளையும், வெந்தயத்தையும் சேர்த்து நன்றாக கழுவி 3 மணிநேரம் ஊற வைக்கவும்.

* நன்றாக ஊறி பின்னர் கிரைண்டரில் தோசைமாவு பதத்தில் அரைத்து உப்பு சேர்த்து 6 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை மெல்லிய தோசைகளாக வார்த்து தேங்காய் சட்னி, மிளகாய் பொடி, கார சட்னியுடன் பரிமாறவும்.

* சுவையான சத்தான சிறு தானிய தோசை ரெடி.

* 4 தானியங்களை தோலுடனும் சேர்க்கலாம், தோலுடன் சேர்த்தால் 5 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். அப்போதே உப்பு சேர்ப்பதால் சரியான பதத்துக்கு புளித்திருக்கும்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News