லைஃப்ஸ்டைல்

வாய்வு தொல்லையை போக்கும் நாட்டு மருந்து குழம்பு

Published On 2016-11-01 04:02 GMT   |   Update On 2016-11-01 04:02 GMT
வாய்வு தொல்லையால் அவதிப்படுபவர்கள் இந்த நாட்டு மருந்து குழம்பை வாரம் இருமுறை செய்து சாப்பிட்டு வரலாம்.
தேவையான பொருட்கள் :

வெள்ளை கடுகு - 1 தேக்கரண்டி
மிளகு - 2 தேக்கரண்டி
வரமிளகாய் - தேவையான அளவு
பரங்கி செக்கை - ஒரு நெல்லிக்காய் அளவு
சுக்கு - சிறிதளவு
பூண்டு - 50 கிராம்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
புளிக்கரைசல் - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - சிறிதளவு
வெந்தயத்தூள் - சிறிதளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சிறிது தண்ணீர் சேர்த்து புளியை கரைத்து கொள்ளவும்.

* வெள்ளை கடுகு, மிளகு, காய்ந்த மிளகாய், பரங்கி செக்கை(நசுக்கியது), சுக்கு, பூண்டு இவை அனைத்தையும் நீர் விட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

* வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் அரைத்த விழுதை சேர்த்து 2 நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கவும்.

* பின் அதில் கரைத்த புளி கரைசல், உப்பு, மிளகாய்தூள் சேர்த்து நன்றாக கொதித்து ஓரங்களில் எண்ணெய் பிரிவும் போது சிறிதளவு வெந்தயத்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து இறக்கி விடவும்.

* நல்ல சுவையுடன் கூடிய வாய்வு தொல்லைய நீக்கக்கூடிய குழம்பு ரெடி. இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News