லைஃப்ஸ்டைல்

சுவையான மசாலா முட்டை பன்னீர் புர்ஜி

Published On 2016-10-21 06:15 GMT   |   Update On 2016-10-21 06:15 GMT
முட்டை புர்ஜி சாப்பிட்டு இருப்பீர்கள். முட்டையுடன் பன்னீர் சேர்த்து செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :

வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 4
சோம்பு - சிறிதளவு
வெண்ணெய் - சிறிதளவு
பன்னீர் - 200 கிராம்
உப்பு - சுவைக்கு
முட்டை - 3 (வெள்ளைக்கரு மட்டும்)
கரம் மசாலா தூள் - அரை ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :

* வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பன்னீரை துருவிக்கொள்ளவும்.

* ஒரு வாணலியில் வெண்ணெய் போட்டு அது உருகியவுடன் சோம்பு போட்டு தாளித்த பின் அதில் ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கிய பின் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

* இரண்டும் நன்றாக வதங்கிய பின் துருவிய பன்னீர் சேர்க்கவும்.

* அடுத்து அதில் கரம் மசாலா தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.

* பூ போல உதிரியாக வந்ததும் அதில் கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும்.

* சுவையான மசாலா முட்டை பன்னீர் புர்ஜி ரெடி.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News