லைஃப்ஸ்டைல்

வயதானவர்களுக்கான கோதுமை மாவு புட்டு

Published On 2016-10-19 02:16 GMT   |   Update On 2016-10-19 02:16 GMT
வயதானவர்கள், நீரழிவு நோயாளிகள் இந்த கோதுமை புட்டை அடிக்கடி செய்து சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - 200கிராம்
ஏலக்காய் - 3
தேங்காய் - அரை மூடி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

* மாவை சலித்து வாசனை வரும் வரை வறுத்து ஆறவைத்துக் கொள்ளுங்கள்.

* தேங்காயைத் துருவி வைத்துக் கொள்ளுங்கள்.

* உப்பை தண்ணீரில் கரைத்து மாவில் தெளித்து உதிரியாகப் பிசையுங்கள். தண்ணீர் அதிகமாக ஊற்றினால் மாவு திரண்டுவிடும். சிறிது சிறிதாக தெளித்துப் பிசைய வேண்டும்.

* புட்டுக் குழாயில் எண்ணெய் தேய்த்து முதலில் தேங்காய் துருவல், அடுத்து கோதுமை மாவு, அடுத்து தேங்காய் துருவல் என மாற்றி மாற்றி வைக்கவும்.

* அடுப்பில் வைத்து 8 முதல் 10 நிமிடங்கள் வேக வைத்து இறக்கி பரிமாறவும்.

* வாழைப்பழம், பப்படம், வேகவைத்த பச்சைப்பயிறு கலந்தும் பிசைந்து சாப்பிடலாம்.

* நீரழிவு நோயாளிகள், வயதானவர்கள், டயட்டில் இருப்பவர்கள் அனைவருக்கும் இந்த புட்டு மிகவும் நல்லது. சிறியவர்களுக்கு சர்க்கரை சேர்த்து கொடுக்கலாம்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News