லைஃப்ஸ்டைல்
நவராத்திரி ஸ்பெஷல்: ஜவ்வரிசி சுண்டல்
நவராத்திரிக்கு பூஜை செய்யும் போது, பிரசாதமாக ஏதேனும் ஒன்றை செய்ய வேண்டும். ஜவ்வரிசி சுண்டல் கொடுத்தால் சற்று வித்தியாசமாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
ஜவ்வரிசி - 1 கப்
பாசிப் பருப்பு - 1/4 கப்
துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 3/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 1 (நீளமாக கீறியது)
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
* ஜவ்வரிசியை இரவில் படுக்கும் போதோ அல்லது 4 மணிநேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். அதுவும் ஜவ்வரிசி மூழ்கும் வரை தண்ணீரை ஊற்றி ஊற வைக்க வேண்டும்.
* பாசிப்பருப்பை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்த, பின் அதில் பருப்பு மூழ்கும் வரை தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். பருப்பானது நன்கு வெந்ததும், நீரை வடிகட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* ஜவ்வரிசியை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின் அதில் ஊற வைத்துள்ள ஜவ்வரிசியைப் போட்டு, குறைவான தீயில் உலர்த்த வேண்டும்.
* பின் அதில் வேக வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்த்து ஒருமுறை கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.
* கடைசியாக துருவிய தேங்காயை சேர்த்து கிளறி இறக்கினால், ஜவ்வரிசி சுண்டல் ரெடி!!!
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.