லைஃப்ஸ்டைல்

சுவையான மிளகு கார சட்னி

Published On 2016-10-01 02:29 GMT   |   Update On 2016-10-01 02:29 GMT
காலையில் இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ள ஒரு அருமையான சட்னி செய்முறையை கீழே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

தக்காளி - 5 (பெரியது)
காய்ந்த மிளகாய் - 4
மிளகு - 2 தேக்கரண்டி
வெந்தயம் - 3/4 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
நல்லெண்ணெய் - 2 குழிக்கரண்டி
கடுகு, உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 ஆர்க்கு
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை :

* தக்காளியை பொடியாக வெட்டிக் கொள்ளவும்.

* வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி மிளகாயை சிவக்க வறுத்து எடுக்கவும்.

* அடுத்து மிளகை போட்டு வெடித்ததும் உடனே எடுத்துக் விடவும். (மிளகாயை எடுத்ததும் அடுப்பை அணைத்துவிட்டு மிளகை போடவும். இல்லையென்றால் வெடித்து சிதறும்.)

* அடுப்பை அணைத்து வைத்து வாணலி சூட்டில் வெந்தயத்தை போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும்.

* மீண்டும் அடுப்பை எரியவிட்டு, வாணலியில் மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி, பெருங்காயம் தூவி, தக்காளியை போட்டு உப்பு சேர்த்து வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கிய பின்னர் எடுத்து, வறுத்த எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

* கடாயில் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து வெடித்ததும், கறிவேப்பிலை போட்டு தாளித்து, அரைத்த சட்னியில் கொட்டி கலந்து விடவும்.

* சுவையான மிளகு கார சட்னி தயார். 

* இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News