லைஃப்ஸ்டைல்
தினமும் உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. தினை, பாசிப்பருப்பை வைத்து பெசரட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாசிப்பருப்பு - ஒரு கப்,
தினை அரிசி - முக்கால் கப்,
சின்ன வெங்காயம் - 50 கிராம்,
இஞ்சி - சிறிய துண்டு,
பச்சை மிளகாய் - 4 (அல்லது காரத்துக்கேற்ப),
கொத்தமல்லித்தழை - கைப்பிடியளவு,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
* இஞ்சி, சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்
* தினை அரிசி, பாசிப்பருப்பை முதல் நாள் இரவே ஊறவிடவும். மறுநாள் களைந்து, தோலுரித்த சின்ன வெங்காயம், தோல் சீவிய இஞ்சி, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் கொர கொரப்பா அரைக்கவும்.
* அரைத்த மாவில் தேவையாயன அளவு உப்பு சேர்த்துக் கரைக்கவும்.
* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு, வேகவிட்டு எடுக்கவும்.
* சுவையான சத்தான தினை பெசரட் தயார்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.