லைஃப்ஸ்டைல்

சுவையான சத்தான தினை பெசரட்

Published On 2016-09-30 06:53 GMT   |   Update On 2016-09-30 06:53 GMT
தினமும் உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. தினை, பாசிப்பருப்பை வைத்து பெசரட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் : 

பாசிப்பருப்பு - ஒரு கப், 
தினை அரிசி - முக்கால் கப்,  
சின்ன வெங்காயம் - 50 கிராம், 
இஞ்சி - சிறிய துண்டு, 
பச்சை மிளகாய் - 4 (அல்லது காரத்துக்கேற்ப), 
கொத்தமல்லித்தழை - கைப்பிடியளவு, 
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: 

* இஞ்சி, சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்

* தினை அரிசி, பாசிப்பருப்பை முதல் நாள் இரவே ஊறவிடவும். மறுநாள் களைந்து, தோலுரித்த சின்ன வெங்காயம், தோல் சீவிய இஞ்சி, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் கொர கொரப்பா அரைக்கவும். 

* அரைத்த மாவில் தேவையாயன அளவு உப்பு சேர்த்துக் கரைக்கவும். 

* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு, வேகவிட்டு எடுக்கவும்.

* சுவையான சத்தான தினை பெசரட் தயார்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News