வழிபாடு
திருமலையில் ஸ்ரீவாரி பாதத்தில் சத்ர ஸ்தாபன உற்சவம்
- ஸ்ரீவாரி பாதத்தில் திருமஞ்சனம் செய்யப்பட்டது.
- அலங்காரம், பூஜை, பிரசாதம் வழங்கப்பட்டது.
திருமலை நாராயணகிரியில் உள்ள ஸ்ரீவாரி பாதத்தில் சத்ரஸ்தாபன உற்சவம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட குடை ஸ்ரீவாரி கோவிலில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க, பூஜை பொருட்கள், மலர்கள், பிரசாதத்துடன் மாட வீதிகள் வழியாக சென்று நாராயணகிரிக்கு சென்றனர். அங்கு ஸ்ரீவாரி பாதத்தில் திருமஞ்சனம் செய்யப்பட்டது. தொடர்ந்து அலங்காரம், பூஜை, பிரசாதம் வழங்கப்பட்டது.
கோவில் துணை அதிகாரி ரமேஷ்பாபு, பாலி ரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.