வழிபாடு

தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை

Published On 2022-08-20 05:19 GMT   |   Update On 2022-08-20 05:19 GMT
  • சொர்ண ஆகர்ஷண பைரவா் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளினார்.
  • சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பைரவரை வழிபட்டனர்.

தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் பரிவார மூர்த்திகளில் ஒருவராக அருள் பாலிப்பவர் சொர்ண ஆகர்ஷண பைரவர். இவருக்கு, ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினத்தில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.

அப்போது பக்தர்களால் வழங்கப்பட்ட சந்தனம், மஞ்சள், திருமஞ்சன பொடி, பால், தேன், இளநீர் உள்ளிட்ட அபிஷேக பொருட்களை கொண்டு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து சொர்ண ஆகர்ஷண பைரவா் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளினார். அப்போது பக்தர்கள் 'கோவிந்தா, கோவிந்தா' என அழைத்து சாமி தரிசனம் செய்தனர். இதனைத்தொடர்ந்து அரளி உள்ளிட்ட பூக்களால் மலர் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த சிறப்பு பூஜையில் தமிழகத்தின் பெரும்பான்மை பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பைரவரை வழிபட்டனர்.

இதேபோல் கொடைக்கானல் கீழ்மலை தாண்டிக்குடி பாலமுருகன் கோவிலில் தேய்பிறை அஷ்டமி, கார்த்திகை பூைஜ நேற்று நடந்தது. பின்னர் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்திலும், கால பைரவர் பூ அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News