வழிபாடு
நாங்கூர்செம்பொன் அரங்கர் கோவில் திருவிழா: பரமபதநாதன் அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாள்
- பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், மலர் அலங்காரமும் செய்யப்பட்டது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவெண்காடு அருகே நாங்கூர் கிராமத்தில் செம்பொன் அரங்கர் பெருமாள் கோவில் உள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் இந்த கோவிலின் ஆண்டு திருவிழா கடந்த வாரம் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், மலர் அலங்காரமும் செய்யப்பட்டது. இதனையடுத்து பெருமாள் பரமபத நாதன் அலங்காரத்தில் எழுந்தருளினார்.
இதனைத் தொடர்ந்து வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.