வழிபாடு

காளசமுத்திரம் கோவிலில் அக்னி வசந்த விழாவையொட்டி தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி

Published On 2022-07-19 05:06 GMT   |   Update On 2022-07-19 05:06 GMT
  • 24-ந்தேதி துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியுடன், தீமிதி விழா நடக்கிறது.
  • 25-ந்தேதி தர்மர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடக்கிறது.

காளசமுத்திரம் கோவிலில் நடந்த அக்னி வசந்த விழாவையொட்டி நடந்த தபசுமரம் ஏறும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கண்ணமங்கலம் அருகே உள்ள காளசமுத்திரம் கிராமத்தில் அருள்மிகு திரவுபதியம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி கோவில் வளாகத்தில் தினமும் மகாபாரத சொற்பொழிவு நடக்கிறது.

மேலும் நாடக மன்ற குழுவினரின் மகாபாரத நாடகங்களும் நடைபெற்று வருகிறது. விழாவின் ஒரு பகுதியாக கோவில் முன்பு தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நாடக நடிகர் ஒருவர் அர்ச்சுனன் வேடமணிந்து தபசு மரம் ஏறி ஈசனிடம் பாசுபதாஸ்திரம் பெறும் நிகழ்ச்சியை நடித்தார். தவத்தை கலைக்க சிவனும் பார்வதியும் வேடன் வேடத்தியாக வந்து அர்ச்சுனனுக்கு பாசுபதாஸ்திரம் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் தபசு மரத்தை சுற்றி திருமணமாகி குழந்தை வரம் வேண்டி பெண்கள் வணங்கினர். மேலும் தபசு மரத்தின் மேலிருந்து பூ, பழம், உள்பட பல்வேறு பிரசாதங்கள் அப்போது வீசப்பட்டன. ஏராளமான பக்தர்கள் இதில் வழிபட்டனர். வருகிற 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிஅளவில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியுடன், மாலையில் தீமிதி விழா நடக்கிறது. மறுநாள் தர்மர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News