வழிபாடு
பாளையங்கோட்டை புனித சவேரியார் பேராலய தேர் பவனி
பாளையங்கோட்டை புனித சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு இரவில் அலங்கரிக்கப்பட்ட புனிதரின் தேர் பவனி நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
பாளையங்கோட்டை புனித சவேரியார் பேராலய திருவிழா 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் திருப்பலி நடந்தது. கடந்த 28-ந்தேதி மாலையில் ஒப்புரவு அருட்சாதனம் வழங்கப்பட்டது.
விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான புனிதரின் தேர் பவனி நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் புனித அந்தோணியார் ஆலய பங்குத்தந்தை ஆண்டோ தலைமையில் திருப்பலி நடந்தது. மாலையில் கல்லிடைக்குறிச்சி பங்குதந்தை பாக்கியசெல்வன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இரவில் அலங்கரிக்கப்பட்ட புனிதரின் தேர் பவனி நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணிக்கு ஆயர் அந்தோணிசாமி தலைமையில் திருவிழா திருப்பலி, புதுநன்மை விழா, மாலை 6 மணிக்கு கொடியிறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 5-ந்தேதி காலை 7.30 மணிக்கு உறுதிப் பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான புனிதரின் தேர் பவனி நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் புனித அந்தோணியார் ஆலய பங்குத்தந்தை ஆண்டோ தலைமையில் திருப்பலி நடந்தது. மாலையில் கல்லிடைக்குறிச்சி பங்குதந்தை பாக்கியசெல்வன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இரவில் அலங்கரிக்கப்பட்ட புனிதரின் தேர் பவனி நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணிக்கு ஆயர் அந்தோணிசாமி தலைமையில் திருவிழா திருப்பலி, புதுநன்மை விழா, மாலை 6 மணிக்கு கொடியிறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 5-ந்தேதி காலை 7.30 மணிக்கு உறுதிப் பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.