ஆன்மிகம்
ஆயிரவள்ளி அம்மன் அய்யனார் கோவிலில் பெண்கள் திருவிளக்கு பூஜை
முதுகுளத்தூர் அருகே மேலபண்ணைக்குளம் கிராமத்தில் உள்ள ஆயிரவள்ளி அம்மன் அய்யனார் கோவிலில் 221 பெண்கள் திருவிளக்கு பூஜை செய்து கூட்டு வழிபாடு நடத்தினர்.
முதுகுளத்தூர் அருகே மேலபண்ணைக்குளம் கிராமத்தில் ஆயிரவள்ளி அம்மன் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரவி குதிரை எடுப்பு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து ஆயிரம்வள்ளி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
பின்னர் இந்த ஆண்டு மழை பெய்ய வேண்டியும், புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களில் இருந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் நலன் பாதுகாத்திட வேண்டியும் 221 பெண்கள் திருவிளக்கு பூஜை செய்து கூட்டு வழிபாடு நடத்தினர்.
பின்னர் இந்த ஆண்டு மழை பெய்ய வேண்டியும், புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களில் இருந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் நலன் பாதுகாத்திட வேண்டியும் 221 பெண்கள் திருவிளக்கு பூஜை செய்து கூட்டு வழிபாடு நடத்தினர்.