ஆன்மிகம்
கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு

மயூரநாதர்கோவிலில், கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு

Published On 2021-06-19 05:09 GMT   |   Update On 2021-06-19 05:09 GMT
திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் வளர்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
மயிலாடுதுறை ஆன்மிக பேரவை மயிலாடுதுறை சைவ சித்தாந்தசபை மற்றும் தமிழ்நாடு திருமூலர் திருமன்றம் சார்பில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் வளர்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

இதைத்தொடர்ந்து கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதில் மயூரநாதர் கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணை கண்காணிப்பாளர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மிக பேரவையின் நிறுவனர் வக்கீல் இராம.சேயோன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
Tags:    

Similar News