ஆன்மிகம்
முருகன்

முருகன் கோவிலில் சிறப்பு யாக பூஜை

Published On 2021-06-17 07:35 GMT   |   Update On 2021-06-17 07:35 GMT
ஆரணியை வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி கோவிலில் சிவாச்சாரியார்கள் தலைமையில் புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாக பூஜை நடந்தது.
ஆரணியை அடுத்த முள்ளிப்பட்டு கிராமத்தில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி கோவிலில் கொரோனா தொற்றில் இருந்து உலக மக்களை காக்க வேண்டியும், உலக மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டும் என சிவாச்சாரியார்கள் தலைமையில் புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாக பூஜை நடந்தது.

பூஜையில் பொதுமக்கள் சார்பாக கோவில் நிர்வாகி பி.டி.எஸ்.சம்பந்தம் மற்றும் விழா குழுவினர், இளைஞர்கள் மட்டுமே பங்கேற்றனர். பின்னர் பூஜிக்கப்பட்ட கலச புனித நீரால் சாமிக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது.
Tags:    

Similar News