ஆன்மிகம்
கெங்கையம்மன்

பி.கே.புரத்தில் கானாற்று கெங்கையம்மன் திருவிழா

Published On 2021-05-31 08:46 GMT   |   Update On 2021-05-31 08:46 GMT
கே.வி.குப்பம் தாலுகா பி.கே.புரத்தில் கானாற்று கெங்கையம்மன் திருவிழா எளிமையாக நடைபெற்றது. கொரோனா நோய்த்தொற்று முன்எச்சரிக்கையாக பக்தர்கள் நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
கே.வி.குப்பம் தாலுகா பி.கே.புரத்தில் கானாற்று கெங்கையம்மன் திருவிழா எளிமையாக நடைபெற்றது.

அம்மன் சிரசு நீலகண்டபாளையத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து பம்பைமேளத்துடன் கொண்டு வந்து பி.கே.புரத்தில் உள்ள கெங்கையம்மன் கோவிலில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் உடலில் பொருத்தினர். இதைத்தொடர்ந்து கண் திறப்பு நடந்தது.

கொரோனா நோய்த்தொற்று முன்எச்சரிக்கையாக பக்தர்கள் நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News