ஆன்மிகம்
நாமக்கல், மோகனூர் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை

நாமக்கல், மோகனூர் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை

Published On 2021-04-16 03:39 GMT   |   Update On 2021-04-16 03:39 GMT
நாமக்கல், மோகனூரில் கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பாலதண்டாயுதபாணி சாமிக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது.
சித்திரை மாத கிருத்திகையை முன்னிட்டு நேற்று நாமக்கல்லில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி நாமக்கல்-மோகனூர் சாலை காந்திநகரில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் நேற்று காலை 8 மணிக்கு கணபதி பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது.

தொடர்ந்து பாலதண்டாயுதபாணி சாமிக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல கிருத்திகையை முன்னிட்டு மோகனூர் காந்தமலை பாலதண்டாயுதபாணி சாமி கோவிலிலும் சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் சாமிக்கு பல்வேறு நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News