ஆன்மிகம்
தா.பேட்டை சிவாலயத்தில் 108 திருவிளக்கு பூஜை
தா.பேட்டை சிவாலயத்தில் 108 பெண்கள் சமூக இடைவெளியுடன் முககவசம் அணிந்து திருவிளக்கு பூஜையில் பிரார்த்தனை செய்தனர்.
தா.பேட்டை சிவாலயத்தில் 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு காசிவிசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர், ராஜகணபதி ஆறுமுகப்பெருமான், வள்ளி, தெய்வானை, பஞ்சமுகபைரவர், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. அதனைதொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காசிவிசாலாட்சி, காசி விஸ்வநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
அப்போது உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், கொரோனா வைரஸ் பிடியிலிருந்து உலக மக்கள் விடுபட்டு நலமுடன் வாழவும் 108 பெண்கள் சமூக இடைவெளியுடன் முககவசம் அணிந்து திருவிளக்கு பூஜையில் பிரார்த்தனை செய்தனர். திருவிளக்கு பூஜை ஏற்பாடுகளை தமிழன்னை நற்பணி மன்ற குழுவினர் செய்திருந்தனர்.