ஆன்மிகம்
திருவிளக்கு பூஜை

முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

Published On 2020-11-12 04:40 GMT   |   Update On 2020-11-12 04:40 GMT
திசையன்விளை அருகே உள்ள நாடார் அச்சம்பாடு முத்தாரம்மன் கோவிலில் 109-வது மாதாந்திர திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
திசையன்விளை அருகே உள்ள நாடார் அச்சம்பாடு முத்தாரம்மன் கோவிலில் 109-வது மாதாந்திர திருவிளக்கு பூஜை நடந்தது.

இதையொட்டி கணபதி, சரஸ்வதி, லட்சுமி, முருகன் துதி பாடல்கள் பாடப்பட்டது. பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி சுலோகங்கள் சொல்லி அம்மனை வழிபட்டனர். மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News