ஆன்மிகம்
அன்னாபிஷேகம்

பெரணமல்லூர் சுயம்பு கரை ஈஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்

Published On 2020-10-31 07:10 GMT   |   Update On 2020-10-31 07:10 GMT
பெரணமல்லூர் பேரூராட்சியில் உள்ள சுயம்பு கரை ஈஸ்வரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடந்தது. பல்வேறு மூலிகை கொண்டு அபிஷேகம் செய்து பின்னர் அன்னத்தால் சிவலிங்கம் முழுவதும் அலங்காரம் செய்து வைத்தனர்.
பெரணமல்லூர் பேரூராட்சியில் உள்ள சுயம்பு கரை ஈஸ்வரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடந்தது. பல்வேறு மூலிகை கொண்டு அபிஷேகம் செய்து பின்னர் அன்னத்தால் சிவலிங்கம் முழுவதும் அலங்காரம் செய்து வைத்தனர். இதில் அதிரசம், வடை பழவகைகள் வைத்து கற்பூர ஆராதனை காண்பித்தனர்.

இதேபோல் திரிபுரசுந்தரி தாயாருக்கு பல்வேறு காய்கறி, பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.கே.அன்பழகன் சமபந்தி விருந்து வழங்கினார்.
Tags:    

Similar News