ஆன்மிகம்
லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவிலில் வருடாபிஷேகம் நடந்த காட்சி

லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவிலில் வருடாபிஷேகம்

Published On 2020-06-02 07:00 GMT   |   Update On 2020-06-02 07:00 GMT
லால்குடியில் உள்ள சப்தரிஷீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து மூன்றாமாண்டு நிறைவு நாளை முன்னிட்டு வருடாபிஷேகம் நடைபெற்றது.
லால்குடியில் உள்ள சப்தரிஷீஸ்வரர் கோவிலில் கடந்த 2017-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் நடந்து மூன்றாமாண்டு நிறைவு நாளை முன்னிட்டு நேற்று காலை கோவிலில் வருடாபிஷேகம் நடைபெற்றது. இதில் ருத்ர ஹோமம், ஸ்ரீசுக்த ஹோமம், துர்கா ஹோமம் ஆகிய ஹோமங்கள் நடத்தப்பட்டன.

அதனைத் தொடர்ந்து பஞ்சமூர்த்தி சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. ஊரடங்கு உத்தரவு காரணமாக இதில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 
Tags:    

Similar News