ஆன்மிகம்
ஸ்ரீரங்கத்தில் மீனாட்சி திருக்கல்யாண வைபவம்

ஸ்ரீரங்கத்தில் மீனாட்சி திருக்கல்யாண வைபவம்

Published On 2020-02-24 05:01 GMT   |   Update On 2020-02-24 05:01 GMT
மகா சிவராத்திரியையொட்டி ஸ்ரீபகவன் நாம பிரசார சேவா மண்டலி சார்பில் ஸ்ரீரங்கத்தில் 3 நாட்கள் ஹோமம், மீனாட்சி திருக்கல்யாண வைபவம் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மகா சிவராத்திரியையொட்டி ஸ்ரீபகவன் நாம பிரசார சேவா மண்டலி சார்பில் ஸ்ரீரங்கத்தில் 3 நாட்கள் ஹோமம், மீனாட்சி திருக்கல்யாண வைபவம் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

முதல் நாளான 21-ந் தேதி மஹாகணபதி ஹோமம், சங்கீத உபன்யாசம், நாம சங்கீர்த்தனம், தேவாரம், திருப்புகழ் இன்னிசை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 2-ம் நாளான நேற்று முன்தினம் பூர்ண புஷ்கலா தர்மசாஸ்தா திருக்கல்யாணம், சிவபூஜை, தியான கீர்த்தனைகள், சிவ திவ்யநாமம், ஊஞ்சல் உற்சவம் ஆகியவை நடைபெற்றன.

3-ம் நாளான நேற்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம், நாமசங்கீர்த்தனம், நந்திகேஸ்வரர், சண்டிகேஸ்வரர், ஆஞ்சநேய உற்சவம் ஆகியவை நடைபெற்றன. இதில், திரளானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News