ஆன்மிகம்
ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் தை அமாவாசை திருவிழா
ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் விழா நாட்களில் தினமும் காலை, இரவில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, கோவில் வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த கோவில்களில் ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலும் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் தை அமாவாசை திருவிழா 12 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு தை அமாவாசை திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, இரவில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, கோவில் வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
10-ம் நாளான நேற்று தை அமாவாசை திருவிழா நடந்தது. மதியம் உருகுபலகை தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து மஞ்சள், பால், சந்தனம், தயிர், நெய், இளநீர், சிகைக்காய் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் இலாமிச்சவேர் சப்பரத்தில் சுவாமி சேர்மத்திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இரவில் கற்பக பொன் சப்பரத்தில் சுவாமி சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து வாணவேடிக்கை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
10-ம் நாளான நேற்று தை அமாவாசை திருவிழா நடந்தது. மதியம் உருகுபலகை தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து மஞ்சள், பால், சந்தனம், தயிர், நெய், இளநீர், சிகைக்காய் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் இலாமிச்சவேர் சப்பரத்தில் சுவாமி சேர்மத்திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இரவில் கற்பக பொன் சப்பரத்தில் சுவாமி சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து வாணவேடிக்கை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.