ஆன்மிகம்
சிவனுக்கு அபிஷேகம்

கனககிரீஸ்வரருக்கு வெந்நீர் அபிஷேகம்

Published On 2019-12-17 08:53 GMT   |   Update On 2019-12-17 08:53 GMT
திருவண்ணாமலை பொன்மலைநாதர் ஆலயத்தில் உள்ள கனககிரீஸ்வரருக்கு தினமும் வெந்நீர் கொண்டு அபிஷேகம் செய்கிறார்கள்.
திருவண்ணாமலையில் இருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தேவிகா புரம். இங்குள்ள பொன்மலைநாதர் ஆலயத்தில் கனககிரீஸ்வரர் அருள்பாலிக்கிறார். இவருக்கு தினமும் வெந்நீர் கொண்டு அபிஷேகம் செய்கிறார்கள். காலையில் இரண்டு மணி நேரம் மட்டுமே பூஜை நடை பெறும் இந்த ஆலயத்தில், சிவராத்திரி அன்று மட்டும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.

108 திவ்யதேசங்களில் முதன்மையான ஆலயமாக கருதப்படும் திருவரங்கத்தில் பள்ளிகொண்டுள்ள அரங்கநாதருக்கு, அமாவாசை, ஏகாதசி, மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் வெந்நீர் கொண்டு அபிஷேகம் செய்வார்கள். வேறு எந்த திவ்ய தேசங்களிலும் இதுபோல் செய்வதில்லை.
Tags:    

Similar News