ஆன்மிகம்
மதுரை காளியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை

மதுரை காளியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை

Published On 2019-11-20 03:39 GMT   |   Update On 2019-11-20 03:39 GMT
தொட்டியம் மதுரை காளியம்மன் கோவிலில் துர்கா வார வழிபாட்டு குழுவினர் சார்பில் குத்துவிளக்கு பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொட்டியம் மதுரை காளியம்மன் கோவிலில் துர்கா வார வழிபாட்டு குழுவினர் சார்பில் குத்துவிளக்கு பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

முன்னதாக காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு மதுரை காளியம்மன், மதுரை வீரன், கருப்பண்ணசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

பின்னர் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. 108 குத்துவிளக்கு ஏற்றி ெபண்கள் பூஜை செய்தனர். இதில் தொட்டியம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
Tags:    

Similar News