ஆன்மிகம்
கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரருக்கு மகா அபிஷேகம்
கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரருக்கு 21 வகையான பொருட்களை கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. இன்று 100 மூட்டை அரிசியால் அன்னாபிஷேகம் நடக்கிறது.
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் உள்ள 13½ அடி உயரமும், 62அடி சுற்றளவும் கொண்ட லிங்கத்திற்கு 100 மூட்டை அரிசியால் சாதம் சமைத்து இன்று (திங்கட்கிழமை) அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. இதையொட்டி பிரகதீஸ்வருக்கு நேற்று ருத்ரஹோமம், மகா அபிஷேகம் நடைபெற்றது.
மேலும் பிரகன்நாயகி, மகிஷாசுரமர்த்தினி, சண்டிகேஸ் வரருக்கு சந்தனம், பால், தயிர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், விபூதி, பழங்கள் உள்பட 21 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அன்னாபிஷேக விழா கமிட்டியினர் மற்றும் இந்து சமய அறநிலைய துறையினர் செய்திருந்தனர். இன்று நடைபெற உள்ள அன்னாபிஷேகத்தையொட்டி கோவிலில் போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் பிரகன்நாயகி, மகிஷாசுரமர்த்தினி, சண்டிகேஸ் வரருக்கு சந்தனம், பால், தயிர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், விபூதி, பழங்கள் உள்பட 21 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அன்னாபிஷேக விழா கமிட்டியினர் மற்றும் இந்து சமய அறநிலைய துறையினர் செய்திருந்தனர். இன்று நடைபெற உள்ள அன்னாபிஷேகத்தையொட்டி கோவிலில் போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.