ஆன்மிகம்
நவநீத பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை, சொற்பொழிவு

நவநீத பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை, சொற்பொழிவு

Published On 2019-07-02 06:11 GMT   |   Update On 2019-07-02 06:11 GMT
வாடிப்பட்டியை அடுத்த நீரேத்தானில் பழமையும், பெருமையும் வாய்ந்ததும், விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்டதுமான நவநீத பெருமாள் கோவிலில் ஆனி ஏகாதசியையொட்டி சிறப்பு பூஜை மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடந்தன
வாடிப்பட்டியை அடுத்த நீரேத்தானில் பழமையும், பெருமையும் வாய்ந்ததும், விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்டதுமான நவநீத பெருமாள் கோவிலில் ஆனி ஏகாதசியையொட்டி சிறப்பு பூஜை மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடந்தன. இதனையொட்டி நவநீதபெருமாளுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அப்போது ஸ்ரீதேவி, பூதேவிக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இரவு கம்பன் இலக்கிய மன்றம் சார்பில் ‘ராவணனின் மாட்சியும், வீழ்ச்சியும்’ என்ற தலைப்பில் மன்ற தலைவர் புலவர் அழகர்சாமி பக்தி சொற்பொழிவாற்றினார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அர்ச்சகர் கண்ணன் தலைமையில் இலக்கிய மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News