ஆன்மிகம்

களக்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

Published On 2019-04-17 06:05 GMT   |   Update On 2019-04-17 06:05 GMT
களக்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் நடந்தது.
களக்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7-ம் திருவிழாவான நேற்று மாலை திருக்கல்யாண வைபவம் நடந்தது.

இதை முன்னிட்டு வரதராஜ பெருமாள் மற்றும் தேவியர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. தொடர்ந்து வரதராஜ பெருமாள், ஸ்ரீபூமி, ஸ்ரீநீலா தேவியர்களுக்கு தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி மற்றும் ஊஞ்சல் வைபவம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News