ஆன்மிகம்

தென்கலை சீனிவாச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

Published On 2019-03-22 06:24 GMT   |   Update On 2019-03-22 06:24 GMT
புதுவை முத்தியால்பேட்டை தென்கலை சீனிவாச பெருமாள் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
புதுவை முத்தியால்பேட்டை தென்கலை சீனிவாச பெருமாள் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நேற்று இரவு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதையொட்டி காலை 10 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், விசேஷ அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு ஏழை மாரியம்மன் கோவிலில் இருந்து சீர்வரிசை எடுத்து வந்து, இரவு 7 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி துரை பாலகிருஷ்ணன் செய்திருந்தார்.
Tags:    

Similar News