ஆன்மிகம்

தங்கம்மன் கோவிலில் சூறை திருவிழா

Published On 2019-03-11 09:00 GMT   |   Update On 2019-03-11 09:00 GMT
அம்பை அருகே உள்ள கல்லிடைக்குறிச்சி தங்கம்மன் கோவிலில் சூறை திருவிழா நடைபெற்றது. அஇதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அம்பை அருகே உள்ள கல்லிடைக்குறிச்சி தங்கம்மன் கோவிலில் சூறை திருவிழா நேற்று நடைபெற்றது. அதனை முன்னிட்டு காலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், 11 மணிக்கு அம்மன் வீதி உலா, மாலை 6 மணிக்கு தீர்த்தல் எடுத்து வருதல் நடந்தது.

பின்னர் இரவு 8 மணிக்கு முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் தாம்பூலம் எடுத்து வருதல், 9 மணிக்கு விளையாட்டு போட்டிகள், 12 மணிக்கு சூறை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர். 
Tags:    

Similar News