ஆன்மிகம்

நலம் தரும் நடராஜர் தரிசனம்

Published On 2018-12-13 11:24 GMT   |   Update On 2018-12-13 11:24 GMT
ஆருத்ரா தரிசனம் அன்று (23.12.2018) நடராஜர் சன்னிதியில் சிவபுராணம் பாடி மனமுருகி வழிபட்டால் ஆடலரசன் அருளால் அகிலம் போற்றும் வாழ்வு அமையும்.
இறைவனது தரிசனம் பார்த்தால் எடுத்த பிறவிக்கும் பலன் கிடைக்கும். அடுத்தடுத்து வரும் சம்பவங்களும் அனுகூலமாகவே நடைபெறும். “கொடுத்து வைத்தவர்கள் நீங்கள்” என்று ஒருசிலரை வர்ணிப்பது வழக்கம். அவர்களெல்லாம் இறைவனது தரிசனம் பார்த்து தகுந்த வாழ்க்கையை அமைத்துக் கொண்டவராக இருப்பர்.

அந்த அடிப்படையில் நடராஜர் தரிசனம் கொடுப்பது வருடத்திற்கு இரண்டு முறையாகும். ஒன்று ஆனித் திருமஞ்சனம், அடுத்தது மார்கழித் தரிசனம். இந்த ஆருத்ரா தரிசனம் மார்கழி மாதம் 8-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை (23.12.2018) வருகின்றது. அன்றைய தினம் நடராஜர் சன்னிதியில் சிவபுராணம் பாடி மனமுருகி வழிபட்டால் ஆடலரசன் அருளால் அகிலம் போற்றும் வாழ்வு அமையும்.
Tags:    

Similar News