ஆன்மிகம்

திருப்பதியில் 11-ந்தேதி ஆழ்வார் திருமஞ்சனம்: 6 மணி நேரம் தரிசனம் ரத்து

Published On 2018-12-10 07:06 GMT   |   Update On 2018-12-10 07:06 GMT
திருப்பதி கோவிலில் 11-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது. இதனால் 6 மணிநேர தரிசனம் ரத்து செய்யப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வருகிற 18-ந்தேதி நடக்கிறது. அதையொட்டி 11-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது.

அதையொட்டி காலை 6 மணியில் இருந்து பகல் 11 மணிவரை தண்ணீரால் சுத்தம் செய்யும் பணி நடக்கிறது. இதையடுத்து 11 மணியில் இருந்து 12 மணிவரை நெய்வேத்தியம் நடக்கிறது.

12 மணிக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். திருப்பதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்தால் அன்று நடக்கயிருந்த அஷ்டதல பாத பத்மாராதனை சேவை மற்றும் 6 மணிநேர தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News