ஆன்மிகம்

பணகுடி ராமலிங்க சுவாமி கோவிலில் வசந்த உற்சவ விழா

Published On 2018-05-07 04:57 GMT   |   Update On 2018-05-07 04:57 GMT
பணகுடி ராமலிங்க சுவாமி, சிவகாமி அம்பாள் கோவிலில் உள்ள நம்பி சிங்கபெருமாளுக்கு வசந்த உற்சவ விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பணகுடி ராமலிங்க சுவாமி, சிவகாமி அம்பாள் கோவிலில் உள்ள நம்பி சிங்கபெருமாளுக்கு வசந்த உற்சவ விழா நடந்தது. உலக மக்கள் நன்மைக்காகவும், மழை பெய்ய வேண்டியும் இந்த விழா 5 நாட்கள் நடந்தது.

வசந்த மண்டபத்தில் நான்கு புறத்திலும் தண்ணீர் நிரப்பி, நடுவிலுள்ள மண்டபத்தில் பெருமாளை வைத்து தாமரை மலர்கள், இதழ்களை நிரப்பி விழா நாட்களில் தினமும் அபிஷேகம், ஆராதனை, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பஜனை பாடல்கள் பாடப்பட்டன.

விழாவில் கடைசி நாள் மாலை பஜனைகள், திவ்யநாமசங்கீர்த்தனம், ராதாகல்யாணம், கருடசேவை நடந்தது. இரவு பெருமாள், அம்பாள் திருவீதி உலா நடைபெற்றது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News