ஆன்மிகம்

சிவ பூஜைக்கான மாதங்களும், மலர்களும்

Published On 2018-02-20 09:14 GMT   |   Update On 2018-02-20 09:14 GMT
சிவ பூஜை செய்ய ஒவ்வொரு மாதங்களுக்கும் ஒவ்வொரு மலர்கள் உகந்தவை. இந்த மலர்களால் சிவ பூஜை செய்தால் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்.
சித்திரை - பலாசம்,
வைகாசி - புன்னை,
ஆனி - வெள்ளெருக்கு,
ஆடி - அரளி,
ஆவணி - செண்பகம்,
புரட்டாசி - கொன்றை,
ஐப்பசி - தும்பை,
கார்த்திகை - கத்திரி,
மார்கழி - பட்டி,
தை - தாமரை,
மாசி - நீலோத்பலம்,
பங்குனி - மல்லிகை.

மாத பவுர்ணமிகளில் கீழே குறிப்பிடப்படுவனவற்றால் சிவ பூஜை செய்தால் அனைத்து விருப்பங்களையும் அடைந்து, சிவசாயுஜ்யம் அடையலாம்.

சித்திரை - மரிக்கொழுந்து,
வைகாசி - சந்தனம்,
ஆனி - முக்கனிகள்,
ஆ டி -பால்,
ஆவணி - நாட்டுச் சர்க்கரை,
புரட்டாசி - அப்பம்,
ஐப்பசி - அன்னம்,
கார்த்திகை - தீபவரிசை,
மார்கழி - நெய்,
தை - கருப்பஞ்சாறு,
மாசி - நெய்யில் நனைத்த கம்பளம்,
பங்குனி - கெட்டித் தயிர்.
Tags:    

Similar News