ஆன்மிகம்

தனவரவு தரும் ஆருத்ரா தரிசனம்

Published On 2017-12-11 10:21 GMT   |   Update On 2017-12-11 10:21 GMT
மார்கழி மாத்தில் வரும் ‘திருவாதிரை தரிசனம்’த்தில் காட்சி தரும் கடவுளை கண்டு களித்தால் வீழ்ச்சியில்லாத வாழ்க்கை அமையும்.
நடராஜர் தரிசனம் ஆண்டிற்கு இரண்டுமுறை நடைபெறும். அவை: ஆனி மாதத்தில் வரும் ஆனித் தரிசனம். மார்கழி மாத்தில் வரும் ‘திருவாதிரை தரிசனம்’. திருவாதிரை தரிசனத்தை, ஆருத்ரா தரிசனம் என்றும் சொல்வார்கள். அன்றைய தினம் சகல சிவாலயங்களிலும் நடராஜருக்கு அபிஷேகம் செய்வதும், ரிஷப வாகனத்தில் ஈஸ்வரனும், ஈஸ்வரியும் திருவீதி உலா வருவதும் நடைபெறும்.

எல்லா சிவாலயங்களிலும் இந்த விழா நடைபெற்றாலும், ஆவுடையார் கோவில், உத்திரகோசமங்கை, சிதம்பரம் ஆகிய தலங்களில் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. காட்சி தரும் கடவுளை அன்றைய தினம் கண்டு களித்தால் வீழ்ச்சியில்லாத வாழ்க்கை அமையும். இந்த திருவாதிரை திருநாள், மார்கழி 18-ந் தேதி (2.1.2018) செவ்வாய்க்கிழமை வருகிறது. 
Tags:    

Similar News