ஆன்மிகம்

செல்வம் தரும் அவல் நைவேத்தியம்

Published On 2017-12-11 08:01 GMT   |   Update On 2017-12-11 08:01 GMT
கண்ணனுக்குப் பிடித்த அவலை நைவேத்தியமாக்கி, அந்தப் பரம்பொருளுக்கு வழங்கினால் எண்ணியது நிறைவேறும்.
சான்றோர்களை, பெரியவர்களைச் சந்திக்கச் செல்வதாக இருந்தால், அவர்களுக்குப் பிடித்தமான பொருட்களையோ, பழங்களையோ, ஆடை, ஆபரணங்களையோ வாங்கிச் செல்வோம். அதே போலத்தான் இறைவனுக்கும் பிடித்தமானதையும் நாம் கொண்டு சென்று அர்ப்பணிக்கிறோம். அந்த வகையில் கண்ணனுக்குப் பிடித்த அவலை நைவேத்தியமாக்கி, அந்தப் பரம்பொருளுக்கு வழங்கினால் எண்ணியது நிறைவேறும்.

வறுமையின் பிடியில் சிக்கித் தளர்ச்சி அடைந்திருந்த குசேலன், தன் மனைவி ஒரு கந்தல் துணியில் கட்டிக் கொடுத்த அவலைக் கண்ணனிடம் ஒப்படைத்தான். ஒப்படைத்த ஒருசில நிமிடங்களிலேயே ஒப்பற்ற வாழ்க்கை குசேலனுக்கு வந்து சேர்ந்தது என்பதை புராணங்கள் நமக்குச் சொல்கின்றன. எனவே, ஏகாதசி அன்று விஷ்ணுவிற்கு அவல் நைவேத்தியம் செய்து வழிபடுங்கள். உங்கள் ஆவல்களை அவன் பூர்த்தி செய்வான். பணக்கவலை தீரும். செல்வந்தனாகும் வாய்ப்பும் உருவாகும். 
Tags:    

Similar News